அவள் கண்கள்

விரிந்த செந்தாமரையாம் உந்தன்
விழிகளின் மூடி திறந்த இமையை
தாமரைமேல் மொய்க்கும் வண்ணத்து பூச்சிபோல்
இருந்தமை கண்டேன் நான் கண்டு மயங்கினேன்
உந்தன் விழிகளின் அழகில்
'மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றிட'
அதை வண்ணத்துப்பூச்சியாய்க்கண்டேன், அதன்பின்னால்
கண்டேனே உந்தன் மலர் விழியை தாமரையாய்
கண்ணால் என்னை உன் காலடிக்கு கொண்டுசென்றாய்
என்னவளே நான் போற்றும் இனியவளே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Aug-19, 12:18 pm)
Tanglish : aval kangal
பார்வை : 321

மேலே