அல்லல் படுத்திய கள்ளியே

உன்னையே நான் நேசித்தேன்
உள்ளத்தில் வைத்து பூஜித்தேன்

கண்ணின் மணிபோல் வந்தவளே
காதலால் என்னை வென்றவளே

கவரும் பேச்சால் கட்டுப்படுத்தி
கருணையால் கவர்ந்து சென்றவளே
காலம் பூராவும் வாழ்ந்திடவே
கனவோடு உழன்றேன் உன்னோடு

பிரிவை பிணமாகவே எண்ணியே
பின்தொடர்ந்தே வந்தேன் கன்னியே
உருளும் பூமி உடைந்தாலும்
உன்னை பிரியேன் எந்நாளும்

காதல் கருவை சுமந்தேனே
கவலை மறந்து திரிந்தேனே
அழகு வார்த்தை ஒன்றாலே
ஆயுளை சிதைத்துச் சென்றாயே

என்னின் இதயத்தின் இன்பமே
ஏனடி என்னை ஏளனித்தாய்
எழுச்சிக் காதலை உதறிவிட்டு
எங்கோ சென்று மறைந்து கொண்டாய்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Aug-19, 7:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 249

மேலே