அவள் அழகிற்கு நான் எழுதும் கவிதையின் முதல் அத்தியாயம்

அவள் அழகிற்கே என்றோர் அதிகாரம்
அமைத்து அழகிய கவிதை புனைய
ஆரம்பிக்க அங்கு அமைந்தது வந்து
முதலாய் என் கண்முன்னே அவள்
மூடிய கமலம் முட்டவிழ்ந்தாற்போல்
மலரும் அவள் விழிகள் பேசும்
கயல்விழிகள் துள்ளும் மான்விழிகள்
அன்பும் பரிவும் பண்பும் நாணமும்
அதிகாரமும் அருணா கிரணமாய் இரவின்
இந்து கிரணமாய் மண்ணினின்று உதிக்கும்
ஒளிர் நவ ரத்தினங்களாய் என் கண்ணைப்
பறித்து ஆட்கொண்டதே அவள் அழகிற்கு
நான் புனைந்த முத அத்தியாயமாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Aug-19, 11:38 am)
பார்வை : 140

மேலே