நன்றிகள் --3

எழுத்து இணையதள உறவுகளுக்கு எனது அன்பு நிறைந்த வணக்கங்கள். நான் இன்றோடு இந்த இணையத்தில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அதனை நினைவு படுத்தும் விதமாக இன்றைய கவிதையை சமர்பிக்கிறேன். மேலும் இந்த இணைய தளத்தில் சேர்ந்த நாள்முதலாய் எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா நண்பர்களுக்கும்; வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு என்னை இத்தளத்தில் சேர்த்து ; எப்போதும் எனக்கு ஆதரவு கொடுத்துவரும் எனது சகோதரர் "அன்னை பிரியன் மணிகண்டன் " அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



எதற்கென்றே தெரியாமல்
எழுத தொடங்கிய
ஒரு பயணம் -- இன்று
எனக்கென்று ஒரு அடையாளத்தை
கொடுத்துள்ளது!!

காகிதத்தையும் பேணாவையும் மட்டுமே
உறவாகக்கொண்டு கவலையில்
நீந்திவருபனுக்கு எப்போதும்
கறையேற கைக்கொடுக்கும்
இந்த இணையதளத்திற்கு
எனது இதயத்தின் நன்றிகள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Aug-19, 8:00 pm)
பார்வை : 49

மேலே