பொய்யில்லை

உடுத்திப் பார்த்தேன் அழகை
ஆரதிப்பவன் என்றே

அழகாக பொய்யில்லை என
நிருபித்தாய்

அழகென்று சொல்லி பின்
ஏன்

கலைத்துப் பார்த்தாய் என
புரியாது நின்றேன்

மீண்டும் அழகு என்றாய்
வெட்கத்தில் நான்

முடிவெடுத்தேன் நீ கலைக்க
நான் உடுத்துவதென..,

எழுதியவர் : நா.சேகர் (24-Aug-19, 10:41 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1178

மேலே