அவள் கேட்ட வரம்

காதல் வானில் பறந்திருந்தோம்
களவாய் யாரும் காணாமலே,
சாதி சனங்கள் பார்த்தாங்கே
சங்கதி பெற்றோ ரறிந்தபின்னே
பேதம் ஏதும் பாராமல்
பெரிய மனதுடன் ஏற்றிட்டார்,
மாது நானும் மகிழ்ந்திட்டேன்
மனம்போல் மணவிழா கண்டதாலே...!

காதல னாக வந்தவரே
கணவ ராக ஆகிவிட்டீர்,
மாதர் மற்றோர் வாழ்த்திடநான்
மனைவி யாக மாறிவிட்டேன்,
சேதி யொன்று கேட்கின்றேன்
சாகும் வரையெனைச் சேர்ந்திருந்து
சோதனைக் காகவும் பிரியாத
சத்திய வரமது தருவீரே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Aug-19, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aval ketta varam
பார்வை : 104

மேலே