உண்மை உனைஉயர்த்தும்
அடிமுடிகா ணாப்பொய்யால் பத்மன் தலைபோய்
அடிமுடிகா ணாமெய்யால் மால்வென்றான் போட்டி
அடிமண் அளக்க முடிவான் தொடமால்
நெடிதுவளர்ந் தான்பின்னோர் நாள் !
உண்மை உனைஉயர்த்தும் பொய்யுனை வீழ்த்திடும்
உண்மை உணர்ந்துவாழ் வாய் !
----கதையும் நீதியும் கவிதையில்