நினைவுகளில் ரோஜா இதழ்களைத் தூவுகிறாய்
ஏதோ நாம் இணைந்தோம்
ஏதோ ஒரு நாள் ஏனோ பிரிந்தோம்
மனவீதியில் மறந்து நான் நடக்கும் போது
நினைவுகளில் ரோஜா இதழ்களைத் தூவுகிறாய்
சரி மகிழ்ந்து நினைத்துப் பார்க்கும் போது
முட்களை வீசி எறிகிறாய்
ஆயினும் மனவீதியில் நான்
உன்னை மறந்தும் மகிழ்வில் நினைந்தும்
தினமும் மௌனமாகவே நடக்கிறேன் !
-----ஸ்பரிசனின் "ஒரு நாள் " கதைக் கருத்தில் எழுதிய
கவிதை