மெல்ல அடிவைத்து வந்தாய் தோட்டத்தில்

கவிதையின்
முதல் அடி
தென்றலைத் தொட்டது
அடுத்த அடி
வான் நிலாவைத் தொட்டது
மூன்றாவது அடி
வண்ண மலர்களைத் தொட்டது
நான்காவது அடி jQuery17100033638215263247506_1567573209023
எதைத் தொடவேண்டும் என யோசித்தேன்
மெல்லடியாள் பூங்கொடிபோல்
மெல்ல அடிவைத்து வந்தாய் தோட்டத்தில் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-19, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே