செல்லம்மா

கருமுகில் கதவினை தகத்து
கதிரவன் தக தக கங்க ஒளியினை
கனப்பொழுதுக்குள் பூமியில் பரப்பி காலைக் காட்சியை புலப்படுத்துகிறான்.

குளிர் பனி போர்த்திய செவ்விதழ் மொட்டு மெல்லமாய் திறந்து சிரிக்கிறது பனிக்குளிரில் விறைத்திருக்கும்
புல் தரையெல்லாம் நீமிர்ந்து நிற்க
மயங்கியே உறங்கிய மனிதர்களும்
கூடி உறங்கிய மந்தைகளும் மெதுவாக
கண் திறக்க இரவின் ராஜியம் முடிவு காண்கிறது.

மெல்லிய இசை குயில் இசைக்க
கூண்டு சேவலும் உரக்கக் கூவ
பக்கத்தில் இருக்கும் பெட்டைக் கோழியும் கொக்கரிக்க வண்ண வண்ண மலர்களை வண்டு எண்ணப் படியே தடவி செல்ல அல்லிக் குளத்து தவளையெல்லாம் ஏதோ சொல்லிச் சொல்லி நீருக்குள் மூழ்க வானத்திலே வெண் முகில் உலாவும் நேரம் இவையென ஆனது.

கண்ணைக் கசக்கி எழுந்தவுடன் என் கையிலே தேநீரை வைக்க சூடான தேநீரோடு சுகமான காலைப் பொழுதினிலே சுவையான கவிதையொன்று நான் கிறுக்க வேண்டாமோ வெத்துக் காகிதத்தையும் எழுத்தாணியையும் கொண்டு வாடி என் செல்லம்மா.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (5-Sep-19, 9:09 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : chellamma
பார்வை : 125

மேலே