மூடிய முகில்திரையில் சிரிக்குது வான்நிலா
பாடிய பல்லவியில் துவங்கிய காதலில்
மூடிய முகில்திரையில் சிரிக்குது வான்நிலா
வீசிய தென்றலில் முகம்காட்டுது தேன்மலர்
ஆசிகூறுது அந்தி வான்இசை தேவதையே
தேடிய தேன்தமிழ் தெவிட்டா சொற்கள்
ஆடிப் பாடுது என்மன மேடையிலே !
பாடிய பல்லவியில் மேவிய காதலில்
மூடியவா னத்து நிலாவும் சிரிக்குது
வீசிய தென்றலில் தேன்மலரும் பார்க்குது
ஆசிகூறு தந்திவான் தேனிசைத் தேவதையே
தேடிய தேன்தமிழ் பூஞ்சொற்கள் கோரஸில்
ஆடிடுதென் நெஞ்சினி லே !
------பஃறொடை வெண்பாவாக