அல்லோகலப்படுத்தும் வதந்திகள்

நாளுக்கு நாள் ஏதேதோ பற்பல திகில் தகவல்கள்
நாட்டில் இல்லை பிடிப்பான பொருளாதாரம் என்றும்
நான்கு புறமும் தீவிரவாதிகள் ஊடுறுவல் எனவும்
நயவஞ்சக ஆட்சி முந்தைய ஆட்சி என்றும்

நடுங்க வைக்கும் சீனா வெடி வந்திருப்பதாகவும்
நஞ்சால் ஆன உணவும் எண்ணெயும் உள்ளதாகவும்
படிப்பில் பலரை பாழாக்குமுறையை புகுத்தியதாகவும்
பக்தியை பல கலைக்கு அளவு கோலாக்கியதாகவும்

குடிமக்களை குடிகாரராக்க கடைகள் ஆக்கியதாவும்
குருவியாய் சேர்த்த பணத்திற்கு சேவை வரி செலுத்த
குவியல் குவியலாய் குறுஞ்செய்தி வருவதாகவும்
வரலாறு காண விலையில் ஆபரணம் உயர்ந்ததாகவும்

ஆக்ரமிப்புகளால் இயற்கை அழிந்ததாகவும்
ஊடகங்கள் உள்ளத்தைக் கெடுத்து ஒழிப்பதாகவும்
மனிதாபிமானம் இல்லா மனிதர்கள் உள்ளதாகவும்
மாறுபட்ட எண்ணங்கொண்டோர் உலவுவதாகவும்

அங்கலாய்க்கும் மென்மையான அன்பு உள்ளத்தோரே
எத்தனை நிகழ்வுகளில் யாதார்த்தமாய் இருந்துள்ளீர்
எவற்றுக்காக ஏரு போல் எதிர்த்துள்ளீர் இது வரையில்
எல்லாமும் நம்மிலிருந்தே தான் தொடங்க வேண்டும்.
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (5-Sep-19, 7:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 49

மேலே