இரவல் இதயம்
கருவோடு உருவாகும்
வேளையிலே /
உருக் கொடுத்த
அன்னையின் உள்ளத்திலே /
உருவாகிறது தாயின்
மென்மையன பாசம் /
முதல் முறை
நம் காதில் கேட்கும் நிசப்தம் /
தாயின் மடி கிடைத்த பின்னே /
தந்தை கரம் சேரும் சேயானதுமே/
கண்டிப்போடு சேர்த்து கிடைக்கின்றது /
பாசறையின் மறு இரவல் இதயம் /
இரு மனம் சேரும் வேளையிலே /
இன்னொருத்தி ஈன்ற பிள்ளையின் உள்ளத்திலே /
நுழைந்து அமர்ந்து விட்டால் /
உள் உணர்வுகளின் தாக்கத்தினால்/ காதல் என்னும் நரம்பின் வழியே /
இடம் மாறுகிறது இன்னும் /
ஓர் இரவல் இதயம் /
இரவல் இதயங்கள் /
உறவாக. எத்தனையோ உண்டு/ அத்தனையும் நிறுத்தம் கண்டு /
விடும் இறுதி ஊர் வலத்தின் பின்னே/ இறுதி வரை நாம்மோடு /
வந்து எரிந்து சாம்பலாவது /
பிறக்கும் போது அன்னை கருவிலே/ கொடுத்த உரிய இதயமது மட்டுமே /