உருகும் பனிக்கட்டி என் உள்ளம் 555

ப்ரியமானவளே...

தென்றல் மோதி
பூக்கள் மலரும்...

உன் சுவாசக்காற்று என்னில்
பட்டு நான் மலர்ந்தேன் காதலால்...

உருகாத பனிக்கட்டிபோல்
என் உள்ளம்....

உருகியது
உன்னை கண்டதும்...

உன் நிழலாய்
நான் வருகிறேன்...

உன் நினைவில்
நான் வாழ்கிறேன்...

தென்றலாக வரும் உன்
நினைவுகளில் தினம் உருகுகிறேன்...

நீ தென்றலாய்
வந்தாய்...

புயலாய் கொடுத்து
சென்றாய் சில காயங்கள்...

மீண்டும்
ஒருமுறை வந்துவிடு...

தென்றலாக
புயலாக என் வாழ்வில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Sep-19, 8:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 566

மேலே