மன்னிப்பு

மீதமுள்ள நாட்களில்
சில மன்னிப்புகள் தேவைப்படுகின்றன
கூச்சமின்றி நோகடித்த மனங்களின் சாபங்கள்
எதிர்கால துர்கனவுகளாய்
நீள்கின்றபோது
ஆழ்கடல்மூழ்கும் அபலைபோல
பற்றிக்கொள்ள துணையின்றி
தள்ளாடிடும்போது
இறுதிக்கால நிமிடங்களை
சிரமப்பட்டு விழுங்கும்போது
மனம்தேடும் பேரோய்வை
நாடிடும்போது
சிலமன்னிப்புகள் அவ்வளவு
நிம்மதி தரும்..
மன்னிக்கவேண்டிய மனங்கள் அன்று
மரத்துப்போகாமல்
இருந்திட வேண்டுகிறேன்...
மீதமுள்ள நாட்களில்
சிலமன்னிப்புகள் தேவைப்படுகின்றன...

எழுதியவர் : Rafiq (9-Sep-19, 7:12 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 99

மேலே