அன்பே

மெதுவாய் நீபேசும்
மௌனவார்த்தை
முகம்வருடும்மயிலிறகு
ஒற்றைப்பார்வை
சிமிட்டும் இமைகள்
பட்டுப்பூச்சி சிறகடிப்பு
இதழ் ஒதுங்கும்
புன்னகையில்
கோடிமின்னல் தெறிக்கிறது
விரல்ரேகை
தீண்டலினில்
குளிர்காலம் வேர்க்கிறது
மேகம் மறைத்த நிலவே
நீ
என் வானில் நுழைவாயா
காலைநேரப்
பனித்துளியாய்
என்நெஞ்சை நனைப்பாயா
காதலெல்லாம் பெண்ணாகி
நீயாக நிறைந்ததடி
மீதமுள்ள ஓர்துளியோ
என்னுள்ளே துளிர்க்குதடி..

எழுதியவர் : Rafiq (9-Sep-19, 7:21 am)
Tanglish : annpae
பார்வை : 254

மேலே