உன் விழிகளை பார்த்து சொல்வேனடி 555

என்னுயிரே...

உன்னை நினைத்து நான்
கிறுக்கிய கிறுக்கல்களை...

நீயும் எதார்த்தமாக
வாசித்துவிட்டாய்...

என் கிறுக்கலுக்கு நீ
வைத்த பெயர் கவிதை...

நீங்கள் யாரையோ
நேசிக்கிறீர்கள் என்கிறாய்...

ஆமாம் என்றேன்
யோசிக்காமல்...

நீதான் என்று சொல்லிவிட
உதடுகள் படபடத்தது...

நீ மறுத்து விடுவாய் பயத்தில்
இதயம் துடிதுடித்தது...

நிச்சயம் சொல்வேன் என்
காதலை உன்னிடம்...

ஒருநாள் உன் விழிகளை
நேருக்குநேர் பார்த்து...

நீயும் சொல்லிவிடு
என் விழிகளை பார்த்து...

உன் பதில் எதுவாக
இருந்தாலும் என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Sep-19, 3:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 331

மேலே