தாய்

தனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ள தெரியாதவள்
எல்லாம் பிள்ளைகளுக்கே , கட்டிய கணவனுக்கே
என்று மட்டுமே எப்போதும் ஓடும் இவள் சிந்தனையில்
இப்படியே வாழ்ந்து இவர்கள் வாழ்வு ஒளிவீச
இவள் கொஞ்சமும் கலங்காமல் தன்னை
கரைத்துக்கொள்ளும் மனித 'மெழுகுவத்தி'
அவளே அன்னையெனும் புனிதவதி
என்னுள் என்றும் இருந்து இன்றும் என்னை
இயங்கவைக்கும் நான் வணங்கும் சக்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Sep-19, 5:12 pm)
Tanglish : thaay
பார்வை : 952

மேலே