கவிதை எழுது எழுது என்று கிசுகிசுக்குது

கடலோரம் நீநடக்கையில் கடற்காற்று பாட்டுப் பாடுது
கடலலைகள் கால்தழுவி முத்தமிட்டு முத்தமிட்டுப் போகுது
விழியோரம் மினு மினுக்கும் வெளிச்சத்தைப் போல்செய்ய
விண்மீன்கள் எல்லாம் வானத்தில் பயிற்சி செய்யுது
இதழோரம் நீ அணியும் முத்தாரத்தைப் புகழ்ந்து பாட
தமிழ் வார்த்தை இன்றி தவிக்குது
கடலோரக் காற்றும் கடலலையும் என் காதோரத்தில் வந்து
கவிதை எழுது எழுது என்று கிசுகிசுக்குது !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Sep-19, 7:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே