காடக்குட்டி

பிராத்திக்கிறேன் நம் புருவங்கள்
ஒட்டிப்பிரியாமல் புதுக்கவிதை பேச,
விழைகிறேன் நம் விரல்கள்
சேர்ந்தால் பிரியாதாவென பேச,
இதயத்தை இடம் மாற்றி மாற்றி
மெளனத்தை மொழிபெயர்க்கிறாய்,
பயணத்தை தடம் மாற்றி மாற்றி
கடற்கரை குதிரையாக்குகிறாய்.

உன் உள்ளங்கையை
என் உலகமாக்கி
உவகையில் உலவச் செய்கிறாய்,
என் சிந்தையை
உன் சொந்தமாக்கி
சங்கில் முத்தெனச்சிறை வைக்கிறாய்.

மேகம் நீ
மழைத்தூரல் நான்
ஒன்றன்று ஒன்றில்லை,
நீயானாலும் நானாலும்
நாம்தான் வேறில்லை.

மெல்லச்சிரி என் மென் பொறி.

எழுதியவர் : Felix Jesudoss (11-Sep-19, 9:53 am)
சேர்த்தது : Felix Jesudoss
பார்வை : 51

மேலே