எத்தனை முறை கொல்வாய்

இன்னும் எத்துனை முறை
என்னை கொல்வாய்???
சிறைப்பட்டிருக்கும் உன் மனதிற்குள்
விஷமேற்றி கொன்றாய் ஒருநாள்
விழிகளை படித்திருக்கும்பொழுது
இமைமூடிக்கொன்றாய் ஒருநாள்
நிலவில் நீயென ரசித்திருக்கும்பொழுதில்
மேகமனுப்பி
மறைத்துக்கொன்றாய் ஒருநாள்
பிறிதொருநாளில்
உன் பெயர் எழுதி முத்தம் கொடுக்கையில்
வெடுக்கென்று சென்று கொன்றாய்
ஒரு கடற்கரை மணலில்
உனது பாதச்சுவடு கண்டு என் பாதம் வைக்க
அலையனுப்பி அழித்துக்கொன்றாய்
கொன்றுகொண்டே இருப்பதுதான்
உன் காதலென்றால்
இன்னும் எத்துனை முறை வேண்டுமானாலும்
கொன்று கொள்
அதற்கு முன் சொல்
என் காதலின் முடிவுதான்
என்னவென்று...

எழுதியவர் : M.Rafiq (12-Sep-19, 6:45 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 218

மேலே