வாழ்ந்து கொள்கிறேன்

வாழ்ந்து கொள்கிறேன்

பற்றற்று இரு !
பரமாத்மாவின் வார்த்தையை
பாடமாய் சொல்லித்தரும்
உபதேசியிடம் பற்று வைத்து
இருந்ததினால்!

என் பற்றில் இருந்த
செல்வங்கள் எல்லாம்
அவர் பற்றி விட
முயற்சிக்க தப்பிக்க
வழி தேட !

அடுத்த உபதேசம்
அவரிடமிருந்து
வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல !
என் வாழ்க்கை
அவரிடமிருந்து எனக்கு
நிரந்தரமல்ல என்பது புரிந்து !

விலகி வந்து
சாதாரண வாழ்க்கை
மீது பற்று வைத்து

உலகத்தின் சகதிக்குள்
உழன்று கொள்ளும்
ஒருவனாய்
வாழ்ந்து கொள்கிறேனே?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Sep-19, 12:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vaalnthu kolkiren
பார்வை : 154

மேலே