ஓடும் மேகங்களே
அடிக்கும் காற்றுடன்
இணைந்தே ஓடும் வெண் மேகமே.!
இடிக்கும் இடியுடன்
இசைக்கும் மழைத்துளி
தெறிக்கையிலே .!
எங்கே ஒழிகின்றாயோ.?
நான் படிக்கும் காதல் கீதமதை.!
பிடிக்கும் என்று சொன்னவர் அங்கே.!
துடிக்கும் அவர் நெஞ்சமறிந்து
எனது பாடலதைச் சுமந்து .!
நொடிக்குள் விரைந்து உரைத்திடாயோ.?
வலது கண்ணும் அரிக்கின்றது.
வந்து காட்சி தந்திடுவாரோ?
ஓடும் மேகமே யோசியமது நீ அறியாயோ.?