என்கவிதைகள் அடைக்கலம் புகுந்தன

ஒருமழை ஓசையுடன் பொழிந்தது
சிலமலர்கள் மௌனமாய் விரிந்தன
குளிர்த் தென்றல் இனிமையாக வீசியது
மனத்தோட்டத்தில் கவிதைகள் இனிமையாக மலர்ந்தன
பாடுபொருள் தலைவியாக அவளும் வந்தாள் !
புன்னகைப் புதுத் தோட்டத்தில் என்கவிதைகள் அடைக்கலம் புகுந்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-19, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே