இறைவன் கொடுத்த சொர்க்கம் 555

இயற்கை...


மாலைகதிரவன் மறையும் நேரம்

செந்தூரம் பூசிய அந்திவானம்...


நானும் ரசித்தபடி வயலில்

ஒரு நடைபயணம்...


தென்றல் என்னை

மெல்ல தழுவி செல்ல...


தென்றலோடு

நறுமணமும் வந்தது...


மணம் வந்த திசையில்
சில
வினாடிகள் நடைபோட்டேன்...


அங்கே அழகாய்
பூத்து
கிடந்தது காட்டுமல்லி...


இயற்கை வாழும்போதே
இறைவன்
நமக்கு கொடுத்த சொர்க்கம்...


அதை அழியாமல் காக்க

வேண்டும் நம் மனித இனம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Sep-19, 3:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 757

மேலே