புண்ணியம் யாருக்கு

உயிருக்கு உயிரான
உற்ற நண்பர்கள்
அருகம்புல்லாட்டம்
அருமையான மனிதர்கள்,
இறைவனை வேண்டி
இறையருள் பெற நினைக்கும்
இரு முதியவர்கள்

மரணத் தருவாயில்
மண்டியிட்டு அழுது
புலம்புவதைவிட,
வாழும்போதே
வழிபட்டு பெறும் வரம்
புனிதமானது
புண்ணியம் கிடைக்குமென

வெளி நாட்டவரும்
எதையோ எதிர் பார்த்து
வந்துபோகும் காசிக்கு சென்று
விசுவநாதரை வழிபட
முதியவர்கள் இருவரும்
முடிவெடுத்து புறப்பட
இருந்த வேளையில்

இருவரில் ஒருவர் சொன்னார்—நாம்
இருவருமே தளர்ந்தவர்கள்
போற வழியில் ஒருவர்
போய் சேர்ந்து விட்டால்
மோட்சம் அவருக்குக் கிடைத்தாலும்
அடுத்தவரின் கதி
அதோ கதிதானே!

எழுதியவர் : கோ. கணபதி. (15-Sep-19, 7:17 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : punniyam yaruku
பார்வை : 56

மேலே