சுற்றுதோ சுழலுதோ உருளுதோ

விளையாட்டுத்தனமாய் சுழலுதடா
விந்தை உலகம் - அதன்
விளைவால் மட்டுமே நடக்குதடா
கதிரவன் உதயம்

பாலைச் சோலைத் தோன்றுவதெப்படி
நீயும் நினையும்
பருவக்காலமும் மாறுவதை
அழகாய் கவனியும்

கடல் சுவைக்கான காரணத்தை
அறிந்தால் அறிவு தெளியும்
கட்டுப்பாடில்லாமல் பொழியும் மழையை
தடுக்கவா முடியும்

மண்ணில் உள்ள சுவைகளை
செடி கொடி மரமே அறியும்
சீக்கு வந்து அவைகள் மாண்டால்
நம் நிலைமை விரைவில் அழியும்

அந்தரத்தில் உணவை உன்னால்
ஆக்கவா முடியும்
அருவி மலை காடு மழை அழிந்தால்
வாழ்வே முடியும்.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (16-Sep-19, 7:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 77

மேலே