உன் பார்வைக்கு ஏங்கிடும் சாதகப்புள் நான்
இறக்கை இரண்டிருந்தும் பறக்க மறுத்த
சாதகம், வசந்தத்தின் முதல் மழைத்
தூறலுக்கு காத்திருந்தது போல பெண்ணே
உந்தன் பார்வையெனும் மகத்தான தூறலுக்கு
காத்திருக்கும் சாதகப் புள்ளானேன் நான்
என் தாகம் தீருவது எப்போது
சொல்லடி பெண்ணே நீ