ஒரு காதல்

உன் மந்தகாசப்புன்னகையில் மயங்கியபின்
எழுதும் கவிதை
மயிலிறகின் மென்மையில் பெயர்
எழுதினேன்
மயிலிறகில் கொஞ்சம் வாசனை வந்தது
எழுதப்பட்ட பெயரே இப்படி
சிரிக்கிறதே
பெயருக்கும் புதியதாய்
உயிர் வந்ததா??இல்லை
பெயர் சுமந்த தாளும் உயிர் கொண்டதா??
நிற்க.
கொஞ்சம் மனம் திறக்கிறேன்
அன்பே..எனத்துவங்கி
ஓர்
மடல் வரைய விருப்பம் எனக்கு
உள்ள காதலையெல்லாம்
மையாக்கி
உயிர் உருகும் வண்ணம்
கடிதம் வரைந்து மறைமுகமாய்
உனைக்குறித்து
நிலவும் மலரும் நீயென புணைந்து
காகித வடிவில் காதலைச்
சொல்லும்
ஆதி முறையை தேடுகின்றேன்..
அந்தோ
கையிடப்பேசியும்
மின்னஞ்சல்களும்
குறுந்தகவல்களில்
குறிப்படங்களும்
கடிதம் சுமந்த உணர்வோடு
காதல் சொல்ல
மறந்தகையால்
உயிரோடுறைந்த காதலதை
உருகி உருகி உனக்குரைக்க
வார்த்தைகளை தேடுகிறேன்..
மடலொன்று வரைகின்றேன் ..
கிடைக்கப்பெற்ற நன்னாளில்
உனக்குள் ஒளிந்த காதலுனை
மெதுவாக சீண்டிவிட்டால்
மெல்ல நகை அதுபோதும்...
உன்
சிறு குறிப்பும்
மனம் அறியும்..

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:31 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : oru kaadhal
பார்வை : 91

மேலே