சாத்தானின் ஓலம்

சூனியத்தின் துவங்குபுள்ளியில்
உதிக்கிறது ஒரு சூரியன்
தப்பிப்பிழைத்த கிரணங்கள்
யோசனையாய் படர்கின்றன
எரிந்த கானகத்தின் எஞ்சிய
இலைகள் மேல்..
சூரியன் மறைந்திருந்த வேளையில்தான்
அது நடந்தது
பிரளயமான தெருக்களில்
சாத்தானின் ஓலங்கள் நிறைய
வெடித்துச் சிதறின சில
பிஞ்சு உயிர்கள்
அண்ட வெளியின் தூரத்து
கிரகத்தில்
மனிதமும் அன்பும் கருணையும்
ஓடி ஒளிந்துகொள்ள
கொட்டமடித்தன
அதிகாரமும் ஆணவமும்
பாவம்..
இன்னமும் நம்பிக்கையுடன்
எதிர்காலம் சிரிக்கிறது
நியாயத்தின் மீள் அரும்புகள்
மலர்ந்திடும் என்று..

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:32 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 41

மேலே