அன்பே

மாலைநேர வெயிலில்
மரத்தடி சாய்ந்து
தேநீர் பருக வேண்டுமென்பேன் நான்
தேநீர் வேண்டாம் பித்தம்
என்பாய்..
நதியோர மணலில்
நனையாமல் நடந்தால்
அழகில்லை என்பேன் நான்
சிறுபிள்ளையா நீ
என்பாய்..
நடு இரவில்
முழுநிலவின்
கறை ரசிப்பேன் நான்
நாளை வேலை கெட்டுவிடும்
உறங்கிவிடு என்பாய்..
கனவுகளில் கால்பதித்து
கவிதைகளை சொல்வேன்
கழுத்தறுக்காமல்
ஆளைவிடு நேரமில்லை
என்பாய்..
உன்போல் ஒரு பெண்ணே
என் துணைவரட்டும் என்பேன்
ஏதாவதொரு
பழந்தீவில் கிடைக்கும் தேடு
என்பாய்..

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:35 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : annpae
பார்வை : 102

மேலே