கருணை செய்

மெதுவாய்
மிக மெதுவாய்
சிலிர்த்திடும் மலருடல் வழிந்த
பனித்துளிபோல்
உன் நினைவுகள் தீண்ட
அந்த நிலவும்
திரிந்த ஒளிச்சிதறல்களாய்
சிரிக்கும் விண்மீனும்
மிதக்கும் மேகமும்
மழைச்சாரலும்
தெளிந்த நீரில் நெளிந்த
அலையும்
கூந்தலில் குடிபுகத் துடிக்கும்
காற்றும்
வயல் நாற்றும்
பரந்த கிளியும்
மாஞ்சோலையும்
கொஞ்சம் கிரங்கித்தான் கிடக்கின்றன..
கருணை செய்
கடைக்கண் பார்வையினாலே

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:36 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : karunai sei
பார்வை : 52

மேலே