கொடுங்கனவு
எனைசூழ் வெளிகள் எங்கும்
வெருண்மையின் இருப்பினில் தகிக்க
உன் நிகழ்வினில்
இருத்திக்கொள்கிறேன் என்னை..
இமைகள் மூடாமல்
எனைத்தேடிடும் அக்கண்களை
நிலவொளியில் புதைத்திடும் முனைப்பில்
விண்ணேறிப்போகிறேன்..
கரங்களில் கரைந்திடும்
சின்னஞ்சிறு மனதொன்று
அரவணைப்பில் சுகத்தில்
நிகழ்காலம் மறக்கிறது
இழந்துவிடாத ஏகாந்தம்
தனிமையின் குரூரத்தில் மருள
மரணத்தாக்குதலுக்குள்ளான மனதாய்
கடினமாய் சிரிக்கிறது..
வீடுசேரா ஆட்டைப்போல்
பகல்பறந்த ஆந்தைபோல்
நீ இழந்த என் நிலைமை
நிலைத்துவிட்ட கொடுங்கனவு...