அன்றொருநாள்

அன்றொரு நாள்
நீ என்னை குளிர்வித்தாய்
ஈரப்பதம் சொட்ட
உன்
அருகாமை வெப்பத்தில்
விரல் தீண்டும் ஸ்பரிசத்தில்
மெலிதான மூச்சுக்காற்றின்
இயல்பான ஏற்ற இறக்கங்களில்
கடினமான மனமுடைக்கும்
மௌனத்தால்
நீ என்னை குளிர்வித்தாய்...
உரசிப்போன உன்
ஆடைகளின் வாசம்
உறைந்துபோன
உன் பார்வைகளின் நொடிகள்
பாவம் என் இதயம்
சுக்குநூறாய் நொறுங்க
சில்லுகளின் வழியே
இதழ் விரித்து சிரிக்கிறாய்...
உள்சென்ற தேநீரின்
புத்துணர்வாய்
உள்ளம் குதூகலிக்கிறது
தேவதையே
உன்னை பார்க்கையிலே...

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:40 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : anrorunaal
பார்வை : 54

மேலே