மழைக்காடு

மழைக்காடுகள் எப்போதும்
ஈரமானவை
நனைந்த பூக்களின்
குளுமையில்
வெப்பமும் அங்கே
குளிர்விக்கப்படும்
தேன் தேடும் வண்டுகள்
ஈர நனைப்பில்
நீந்தி
உச்சிக்கிளையின் ஒற்றைப்பூவில்
மகரந்தம் சேர்க்கிறது
கானகத்தின் மேற்க்கூரை
வல்லூறுகளின் கண்காணிப்பில்
நிரம்ப
புதுமழை
இறங்க இடம் தேடுகிறது
அன்றுதான் பிறந்த
வண்ணத்துப்பூச்சி
புதுத்துளியை
தன் இறகில் சுமக்கிறது
அங்கே
மற்றுமொரு மழை பெய்கிறது...

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:42 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 260

மேலே