வாழ்த்து

சேராத மலரொன்று
வாசம் தந்து
வாராயோ அன்பே
என பாடல் தந்தால்
இறந்ததுபோன நொடிகள் எல்லாம்
வரிசைவந்து
காணாமல் போன வலி
காட்டித்தரும்
தாகங்கள் தீர ஒரு
நதியாய் வந்து
யாகங்கள் ஏதும் இன்றி
விதியை தந்து
காதலே இல்லா ஒரு
காதல் கொண்டு
போனதேன் பெண்ணே
என்னை தனியே விட்டு...
இளையவள்நீ அதனால்
பாசம் கொண்டு
கதையேதும் பேசாது
நேசம் வைத்து
வரும்நாளை நினைத்தே
சிறு காதல்கொண்டு
இருந்தேனே எதனால் நீ
சென்றாய் விட்டு??
மலரே உனை மறுபடி நான்
மனதில் வைத்தேன்
மலராய் நீ மகிழ்ந்திருக்க
விருப்பம் செய்தேன்
சிலகால அன்பே
எனும்போதும் ஏனோ
இனமறியா பாசம்
உன்மேலே கண்ணே...
வாழ்வாங்கு எப்போதும் நீ
வாழ வேண்டும்
எந்நாளும் பொன்னாளாய்
உனக்காக வேண்டும்
சிறப்பான சிறப்பெல்லாம்
உனை சேர வேண்டும்
நிலைகொண்ட புன்னகையோடு
உனை காண வேண்டும்...

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:44 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : vaazthu
பார்வை : 47

மேலே