கூடலும் கூடல் நிமித்தமும்

கருக்கியது மாலை
தழுவியது தென்றல்
நழுவியதோ ஆடை
தழுவலில் நழுவலில்
வழுக்கியது மனம்
வழுக்கலில் பிறழ்ந்ததென் சிந்தை
விழி வழியே காமம் வழிய
விரல்கள் எழுதியது ஓர் கவிதை
உரசலில் ஊடலில் தனித்த நெஞ்சம்
உயிர்த்தது உணர்வுகளின் மாயத்தில்
உடன் அவளுடன் கூட தவித்தது
உயிர்பூவோ லட்சம் முறை பூத்து மலர்ந்தது

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:18 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 88

மேலே