என்னவொரு ஆனந்தம்

பிறந்தது முதல் தேடிக்கொண்டே இருக்கிறேன்
என் தேடலின் முடிவை
இதுவரை எட்டவே இல்லை
அடையாளம் தெரியாமல்
கருப்ப சிவப்பா என அறியாமல்
அ ண்ட சராசரம் முழுதும்
அலைந்து திரிந்து
அகப்படாத ஒன்றை
தேடி தேடி சலித்து விட்டேன்
அங்கே என்றனர் சிலர்
இங்கே என்றனர் சிலர்
அ ங்கும் இங்கும் பரவிக்கிடக்கிறது என்றனர் சிலர்
அங்கும் காணாமல் இங்கும் காணாமல்
எங்கும் காணாமல்
எனக்குள்ளே பயணித்தேன்
நான் எனக்குள் போக போக
நான் கண்டிராத உலகங்கள்
புது புது கோளங்கள் விரவி கிடக்க
என் தேடலை தொடர்ந்து நடத்த
என் அக வழி விரிந்து
எனக்குள்ளே இருக்கும் ஒளியை
எனக்கு வெளியே காட்ட
என்னவொரு ஆனந்தம்
நான் நிறைவான களிப்பில் ஆழ்ந்தேன்
இருள் ஒளி யென்றபிரிவினை இல்லாத
இருப்பிடத்தில் திரும்பி வர மனமின்றி
நிலைத்து விட வரம் கேட்டேன்
அகத்துள் இருக்கும் ஒளியின்
அகத்துள் நிலை பெற அருள் கேட்டேன்
நான் என்னை விட்டு அகலும் முன்
நான் அதனுள் நிலை பெறுவேன்
ஊன் மறந்து உயிர் மறந்து
கான் ஏகும் முன் தேடுவீர் உமக்குள்ளே
வான் உறையும் வானவர்கள்
வந்தும் கரம் பிடித்து வழி நடத்தி செல்வாரே
வையம் உணராத சத்திய பொருள் இதுவே

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:19 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 86

மேலே