தூறலில் நனைந்து

தூறலில் நனைந்தே
சாலையில் நடந்தோம்
சாரல் தென்றலும்
நம்மிருவரையும் நனைக்க......
சாலையோரத்து டீக் கடையில்
தேநீர் பருகினோம்
தூறல் இன்னும் வலுத்தது
மறுபடியும் நனையலாம் என்றாய்
மறுத்தேன்
கையைப்பிடித்து இழுத்து கட்டாயப் படுத்தினாய்
நடந்தோம் தெப்பலாய் நனைந்தோம்
மறுநாள் போனில் அழைத்தாய்
தொடர் தும்மலில் பதில் பதில் சொன்னேன்
நீ சிரித்தாய்
அந்த மாலைப்பொழுதை நினைத்தால்
இன்றும் மழையில் நனைகிறது மனது

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-19, 11:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 123

மேலே