காதல் வலி 74

அவளின்
பாதம் பாதம் அல்ல
சுப்ரபாதம்
அல்ல அல்ல
சூப்பர் பாதம்

அங்கே அழகிகள்
மாநாடு நடந்துகொண்டிருந்தது
அவள்
மட்டும் அழகிய மான்களோடு
நடந்துகொண்டிருந்தாள்

அவள் ஒரு கவிதை

அதில் பென் மை
இருக்காது பெண்மை இருக்கும்

எதுகை இருக்காது
இருகை இருக்கும்
சந்தம் இருக்காது
சாந்தம் இருக்கும்

எழுத்து இராது
அழகிய கழுத்து இருக்கும்

தளை இருக்காது
தலை இருக்கும்

நடை இராது
நடை இருக்கும்

தாளில் பிறக்காது
அன்னை சூலில்
எழுதிய கவிதை

எழுதியவர் : புதுவைக் குமார் (19-Sep-19, 4:05 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 37

மேலே