அவளும் மழையும்
எங்கும் காய்ந்த மண் குளிர்ந்திட வேண்டி
எஞம் , சிறப்பு வேண்டுதல், பிரார்த்தனை
மழையே வந்திடு எம்மைக் காக்க
என்று ஒரு மனதாய் மக்கள் வேண்ட
அந்த பிரார்த்தனையில் நானும் ,
அதோ வருகிறாள் என் காதல் கிளி வர்ஷா
வசந்த கால தூறலாய் ஆடி அசைந்து
வருகிறாள் அவள் என் மனம் குளிர
இதோ அருகில் வந்தாள் என்னை அணைத்தாள்
என் இதழ்களில் அவள் இதழ்கள் , நெருக்கம்
காதலில் ஓர் இன்பத்தீ ……...அதை
குளிர வந்தது நான் வேண்டிய பருவ மழை
பருவ மழையாய் என்னவள் வர்ஷா
அவளோடு வந்தது மழையும்
மண் குளிர என் மனமும் குளிர