பெண்களுக்கு வர்ணிப்பது பிடிக்குமா
நீ சில நொடி வானவில் ஏழு வண்ணங்களும் உன்னுளே!
சொக்கரின் பார்வைப்படாத மதுரை மீனாட்சியோ!
மஞ்சள் வெயிலில் வெள்ளை நிலவாக நீ வந்தாய்! நான்ஒப்புக்கொள்கிறேன்.
நீ அழகிதனென்று!
நீ சுவரில் வரையப்பட்ட ஓவியத்தின் பக்கம் சென்று விடாதே!
ஓவியம் உயிர்பெற்றுவிடப்போகிறது
நீ பூக்களுக்கு எல்லாம் புரியாத புதிராய் இருக்கிறாய்!
நீ சிந்தனையின் ஊற்றாய்!இருப்பதால் கவிஞர்களில் கண்ணில் பட்டு விடாதே!
உன் பெயரை சொல்லி விடாதே! தமிழ் எழுத்துகள் போட்ட போட்டியில்....
பெண்களுக்கும் தான் வர்ணனைகள் பிடிக்காமல் போய்விடுமா?
****** துரைராஜ் ஜீவிதா*******