எனை உன்னுள்

எனை உன்னுள் புதைத்துவிட
வேண்டினேன்
புதைந்தால் எரிந்திடுவாயென
சாபம் கொடுத்தாய்
குளிர்வித்துப்பின் கொல்லடி என்றேன்
எரிகையில் உனக்கு வேர்த்திடும் என்றாய்
வேர்வைக்குளியலில் மிதந்து
உயிரின் வேர்களை அறுப்போம் என்றேன்
உடைகருகா நெருப்பொன்றை மூட்டிவிட்டு
நீந்த வா.. என்றழைத்தாய்....

எழுதியவர் : M.Rafiq (19-Sep-19, 5:07 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : yenai unnul
பார்வை : 292

மேலே