எனை உன்னுள்
எனை உன்னுள் புதைத்துவிட
வேண்டினேன்
புதைந்தால் எரிந்திடுவாயென
சாபம் கொடுத்தாய்
குளிர்வித்துப்பின் கொல்லடி என்றேன்
எரிகையில் உனக்கு வேர்த்திடும் என்றாய்
வேர்வைக்குளியலில் மிதந்து
உயிரின் வேர்களை அறுப்போம் என்றேன்
உடைகருகா நெருப்பொன்றை மூட்டிவிட்டு
நீந்த வா.. என்றழைத்தாய்....