"உன்னை காண்கிறேன் தோழியே"
அழகு குழந்தையின் அமைதி சிரிப்பில்.,
கோடைக்கால மழையின் பிறப்பில்!
மார்கழி மாத பனியின் சக்தியில்.,
வளைந்து நிற்கும் வானவில் மத்தியில்!
இரவில் பூக்கும் அமைதி கனவில்.,
மாதம் ஒருமுறை உதிக்கும் பௌர்ணமி நிலவில்.,
வெறும் கல்லென நினைத்தேன் என்னை,
என்னை செதுக்கி சீர்ப்படுத்த உளியாக்கினாய் உன்னை!
தோழியே...
என் பாவம் தீர்க்க வந்தாய் கங்கை ஊற்றாக..,
உன் உயிர் வாழ உதவுவேன் அமைதி காற்றாக!
உயிர் உள்ளவரை...
இணைப்பிரியாமல் வாழ்கிறது நீரும் மீனும்,
அது போல வாழ்வோம் நீயும்,நானும்..!