"தொலை தூரத்தில் என் தோழி"
பாறையாக இருந்த என் இதயம்,
மலராய் நீ மலர்வாய் என ஆசை கொண்டது நடக்கவில்லை,
ஆனால்............
மழையாக உன் நினைவுகள் என்
இதய பாறையை குளிர வைக்கிறது,
மலரின் மணத்தை காற்று கடத்தி சென்றாலும்
அதன் மணம் குறைவதில்லை..,
நான் காலையில் விழித்து மாலை உறங்கும் வரை
அன்றைய தினம் சுகமாய் நிறைவதில்லை...,
ஆனாலும்.....
சுகமாய் சுவாசிக்கிறேன் என்னுள் பூக்கும்,
உன் நினைவெனும் பூக்களை..,
இது போதும் தோழியே,
கடத்தி விடுவேன் என் மீதி நாட்களை ...!