அவள் புன்னகையும் சிரிப்பும்
அவள் புன்னகைக்கு என் மனம் பறிபோனது,
அப்போது என் உள்மனம் எனைக்கேட்டது,'இவள்
புன்னகைக்கு என்ன விலை தருவாய் நீ ' என்று
அதற்கு நான் சொன்னேன்' என்னையே கொடுத்துவிட்டப் பின்
என்னிடம் ஏதும் இல்லையே இன்னும் கொடுக்க '
என்றேன், அது அவள் காதில் எப்படி சென்று
அடைந்ததோ நான் அறியேன், அவள்
வாய் திறந்து மெல்ல சிரித்தாள் , அவள்
சிரிப்பில் சிறையானேன் நான் இப்போது .