நல்லதே வாழ்வில் நடக்கட்டும்

அன்பும் நேசமும் பண்பும் நேர்மையும்
ஆசானை மதிக்கும் அரிய குணமும்
இறை பக்தியும் இதய சுத்தியும்
எம்மில் வளரட்டும் இனிமை மலரட்டும்
தாய் தந்தையைத் கனம் செய்யும்
நல்ல குணங்கள் நம்மில் வளரட்டும்
இருப்பவன் வாழ்வில் எழுச்சி அலை
இல்லாதான் வாழ்வில் இழிவே நிலை
ஏழையைக் கண்டால் இதயம் உருகும்
இனிய பண்பு எம்மில் சிறக்கட்டும்
பயமும் கோபமும் பழக்கத்தில் இல்லாமல்
பணிவும் பக்குவமும் பன்மடங்கு பெருகட்டும்
அறிவும் விவேகமும் பணிவும் பக்தியும்
உன்னில் நின்று உன்னை ஆழட்டும்
மகிழ்வை நெஞ்சம் உன்னில் பார்க்கட்டும்
இனிமை நாதம் இதயம் பூக்கட்டும்
ஒவ்வாமை ஒழியட்டும் ஒற்றுமை வழியட்டும்
எரிமலை போல் வரும் இன்னல்கள் யாவும்
பனிமலையாய் உருகி பஞ்சாய்ப் பறக்கட்டும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (23-Sep-19, 2:18 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 194

மேலே