எத்தனை கோடி இன்பம்

எத்தனை கோடி இன்பம்...

உசுரே உசுரே எங்கேபோன
உறவே உறவே என்னான்னா
உன்ன எண்ணித்தான் நான் வாழுறேன்
உன்ன காணாமத்தான் நான் கலங்குறேன் [உசுரே ]

கண்ணுக்குள்ள விழியா நீயான
நெஞ்சுக்குள்ள துடிக்காம ஏன் போன
நெஞ்சுக்குள்ள கூடு கட்டிவாழுறேன்
நித்தம் நித்தம் உன் பேரத்தான் பாடுறேன் [உசுரே ]

உயிரானாய் மெய்யானாய்
உயிர்மெய்யாய் நீயானாய்
அன்னைத்தமிழை உரைக்கையிலே
ஆனந்தம் பொங்குது மனதினிலே
நரம்புகள் நாதம் மீட்டுதே
நா சிலிர்த்தெழுந்து பண் பாடுதே [உசுரே ]

உலகமொழிக்கெல்லாம் உயிரானாய்
உலகுக்கு நீ முதலானாய்
உன்னை அழிக்க பெரும்கூட்டம்
போட்டு தவிக்குதே பலத்திட்டம்
காற்றை கயிறால் இழுக்கமுடியுமா
தமிழே உன்னைத்தான் அழிக்கமுடியுமா .. [உசுரே ]

இவன் மு.ஏழுமலை 9789913933

எழுதியவர் : மு. ஏழுமலை (23-Sep-19, 2:56 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 76

மேலே