பிரியமானவளே

உள்ளமென்னும் வெள்ளத்திலே
ஓடமானவளே /
இதயமென்னும் தோட்டத்திலே
பூத்துச் சிரிப்பவளே /
நெஞ்சம் என்ற பஞ்சணைக்கு
உரிமையானவளே /
ஓடும் குருதியின் அணுக்களோடு
நெருக்கமானவளே /

ஏழ்மையில் இருந்து மீண்டிட /
இல்லற வாழ்விலே இன்பமதைப் பெருக்கிட /
பொன்னாரம் போட்டு என்னவளை
காண்ணாரப் பார்த்திட /
அயல் நாடு கடந்தேனடி சின்னவளே /

இரண்டு ஆண்டு கடக்க இரு
மாதம் உள்ளதடி இனியவளே /
இதழிலே புன்னகை பிறக்க திறந்த விழியோடு தலை வாசல் நோக்கடி /
என் மனம் எங்கும் காதல் மணம்
பரப்பிட/
நிறைந்த பாசத்தோடு விரைந்து வருகின்றேனடி /
எனது ஆத்மாவை ஆளும்
பிரியமானவளே /

(இது கவிதை இல்லையாம் நடுவர் தீர்ப்பு 😊 சரி நீங்க லைக் போடுங்கப்பா 😂)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-Sep-19, 12:42 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : priyamanavale
பார்வை : 231

மேலே