அத்தை மகளாக வந்துவிடடி 555

என்னவளே...


என் விழிகள் கலங்குவதர்க்கு
பலர்
காரணமாக இருந்திருக்கிறார்கள்...


என்கண்ணீரை துடைக்க

நீ இருப்பாய் நினைத்தேன்...


நீயும்

அவர்களை போலவே...


ஏனோ என்னை

நீ அழவைத்தாலும்...


நீ வேண்டுமென்றே

அடம்பிடிக்கிறது என் மனது...


காரணமற்ற சந்தேகத்தால்

மோதல்வருகிறது...


தொலைந்துவிடுமோ

நம் பாசம்...


தவிப்பிலே
காலமும்
செல்கிறது...


சந்தேகம் கொள்ளும்

சண்டைகாரியாக வேண்டாம்...


சந்தனம் பூசும்

அத்தை மகளாக வந்துவிடடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Oct-19, 8:03 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1038

மேலே